சுற்றுலாப் பயணிகளுடன் மலேஷிய படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

227 0

சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த மலேஷிய படகு ஒன்று காணாமல் போய் உள்ளதாக மலேஷிய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன படகில் 28 சுற்றுலாப் பயணிகள் உட்பட 31 பயணிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன புதுவருடத்தை கொண்டாடும் நோக்கில் மலேஷிய கிழக்கு கடற்பிராந்தியத்தில் உள்ள சபா சுற்றுலாத் தலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், படகுடனான தொடர்பு செயலற்றுப் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை காணாமல் போன இந்த படகினை தேடும் பணிகள் தற்போது முனைப்புடன் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அந்த கடற்பிராந்தியத்தில் அடிக்கடி கடல் கொந்தளிப்புடனான புயல் காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.