மன்னார் படகு விபத்து தந்தையும் மகனும் பலி

237 0

மன்னார் சவூத்பார் கடற் பிரதேசத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும் உயிரிழந்தனர்.

இவர்களது உடலங்கள் மன்னார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்று இரவு ஏழு மணி அளவில் கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது இவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் கடலுக்குள் மூழ்கியவர்களை மீட்கும் பணிகளை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 9 வயது சிறுவனின் உடலம் மீட்கப்பட்டது.

நீரில் மூழ்கிய தந்தையின் உடலம் மீட்கப்படாத நிலையில் கடற்படையினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையினால் இன்று பிற்பகலில் அவரது உடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை செல்ல வேண்டிய பல சிறுவர்கள் பெற்றோர்களுடனும், உறவினர்களுடனும் கடற்தொழிலுக்கு செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.