அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது

264 0

கல்கிரியாகம , அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யானைத் தந்தங்களை 20 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கே குறித்த நபர்கள் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.