உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரியங்கர பதவி நீக்கம்

227 0

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் பிரியங்கர ஜெயரத்னவுக்கு இது தொடர்பில் பெக்ஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு தொடக்கம் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்த இவர், நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி கடந்த டிசம்பர் 30ம் திகதி தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பிரியங்கர, கடந்த வாரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்திலும் அமர்ந்தார்.

எதுஎவ்வாறு இருப்பினும் பிரியங்கர ஜெயரத்னவின் வெற்றிடத்திற்கு இதுவரை பிறிதொருவரின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை எனவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.