கேரள கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் அனுராதபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் வசம் இருந்து 3 கிலோ 650 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒருவர் என, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.