யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

389 0

யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கலாசார மத்திய நிலையத்திறப்பு விழாவில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களின் கலை, கலாசாரம் போன்றவை பாதுகாத்து வளர்க்கப்பட வேண்டும் எனத்தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இனிவரும் காலங்களில் கலை மற்றும் கலாசாரத்தை வளர்க்க பிரதேச செயலகங்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் வடக்குக் கிழக்கிலே இந்துக்களின் ஆலயங்களில் விக்கிரங்களின் சிலைகள் உடைக்கப்பட்டு, திருட்டுக்கள் இடம்பெற்றுவந்ததாகக் குறிப்பிட்ட விஜயகலா மகேஸ்வரன், தற்போது குறித்த நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.