ஊர்காவற்றுறை கர்பிணி படுகொலை – நேரில் கண்ட சாட்சிக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

224 0

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கர்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊர்காற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதையடுத்து, குறித்த சிறுவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.