ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

215 0

தமிழகத்தில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சுந்தரராஜன், இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்து, அதன் பிறகு, சட்டமும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் கலந்துகொள்ள அதிக அளவிலான மாடுகள் வருவதாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற காரணத்தாலும் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரத்துக்குள் போட்டிகளை நடத்தவுன்னதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.