கோப் குழுவின் பிரதிநிதிகளுக்கு அழைப்பாணை

311 0

கோப் குழுவின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே. வி. பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் கவனத்துக்கு அவர் கொண்டுவந்துள்ளார்.

கோப் குழுவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதிவாதிகளாக்கி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றின் மனு பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய,

இந்த விடயம் தொடர்பில் சட்ட அம்சங்களை ஆராய்ந்து தெளிவுபடுத்தலொன்றை வழங்குவதாக கூறியுள்ளார்.