சிறுபோக வேளாண்மைச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, விவசாயிகளுக்கு அரைமானியத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய இனத்தைச் சேர்ந்த விதைநெல் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று (07) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழுள்ள 40 ஏக்கருக்குரிய விதைநெல் இதன்போது விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அப்பகுதி விவசாயப் பொதனாசிரியர் ரி.கோபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராசா மற்றும் உதவி விசாயப் பணிப்பாளர் த.மேகராசா உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு விதைநெல்லைப் பகிர்ந்தளித்தனர்.

