நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலகம் முன்பாக இன்று (07) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சங்கானை பிரதேச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


