அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை- ரங்க கலன்சூரிய

282 0

தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக, இனவாதம், மதவாதத்தைத் துண்டும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகளால் தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரங்க கலன்சூரிய தெரிவித்தார்.