இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாடு இன்று சிறந்த பாதையில் செல்கின்றது.
நாட்டின் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தகுந்த நேரம் வந்துள்ளது.
சிறுபான்மையினருக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் பெரும்பான்மை
மக்களும் விருப்புடன் இருக்கின்றனர் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.