பேராதனை பல்கலை மாணவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்

206 0

பேராதனை பல்கலைகழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கண்டி நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பகிடி வதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில், சட்டத்தரணி ஊடாக எட்டு மாணவர்கள் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்தே, அவர்கள் அனைவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.