வவுனியாவில் நான்காவது நாளாக சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

241 0

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் இன்று மன்னார், கிளிநோச்சி, மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மக்கள் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துவரும் நிலையில் வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினரும் உண்ணாவிரதிகளுக்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் இளைஞர் யுவதிகளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.