மனசாட்சி மற்றும் புத்தியுள்ள எவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இல்லை

232 0

மனசாட்சி மற்றும் புத்தியுள்ள எவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், மகிந்த ராஜபக்ச எப்போதும் நாட்டை குறித்து சிந்தித்து வேலை செய்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கத்தில் மாத்திரம் தற்போதும் அவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

பிரதேச சபை மட்டத்தில் வயிற்றுக்காக பிழைப்பு நடத்தும் சிலர் ராஜபக்சவின் அரசியலில் பங்குபற்றி வருகின்றனர் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.