காலத்தின் தேவையறிந்து யேர்மன் மக்களின் தாயகம் நோக்கிய அவசர மனிதாபிமான உதவித்திட்டம்

198 0

சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் இன அழிப்பு போரினால் பாதிக்கப்பட்டு , உடல் உறுப்புகளை இழந்து , சொந்த உறவுகளை இழந்து , உடமைகளை இழந்து அடிப்படை வசதி அற்று கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு வாழும் எம் உயிர் தாயக உறவுகளுக்கு யேர்மன் தமிழ் மக்கள் சார்பில் தொடர்ச்சியாக கரம் கொடுத்து வருகின்றோம் . அந்தவகையில் கடந்த நாட்களில் அவசர உதவித்திட்ட வழங்கலாக கிளிநொச்சியில் மிகவும் கஸ்ரத்தில் வாடும் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு யேர்மன் மக்களின் சார்பாக மனிதாபிமான உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்றைய நாட்களில் உணவுப்பொருட்களின் விலை உயர்வால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாயக மக்களுக்கு தமது பேராதரவை அளித்து வரும் யேர்மன்வாழ் தமிழ்த் தேசிய உணர்வுள்ள புலம்பெயர் மக்களுக்கு இத் தருணத்தில் நன்றிகளை செலுத்துவதுடன் , தாயகத்தில் தொடர்ச்சியாக எமது உறவுகளுக்கு கரம் கொடுப்போம் என இத்தருணத்தில் மீண்டும் உறுதி அளிகின்றோம்.