மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில், மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

273 0

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு மட்டிக்கழி பகுதியில் இருந்து நாவலடி புதுமுகத்துவாரம் கடற்பரப்பில் படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது வீசிய கடும் காற்றுக் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாகவும் இதில் இருந்த ஒருவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில் ஏனைய இருவரும் காணாமல் போயுள்ளதாவும் காணாமல்போன இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காணாமல் போன ஒருவரின் சடலம் நேற்று நள்ளிரவு கரையொதுங்கியுள்ள நிலையில், மற்றைய நபரை தேடி வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் தேடுதலில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு திராய்மடு 08ஆம் குறுக்கை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ந.வசந்தராஜ் வயது 30 எனவும் காணாமல் போனவர் அவரின் சகோதரரான ந.செல்வராஜ் வயது 20 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.