வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும்(காணொளி)

252 0

காணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில் இறுதியான முடிவை அறிவிக்குமாறும், அரசியல் கைதிகளாக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் கடந்த திங்கட்கிழைமை ஆரம்பமானது. உண்ணாவிரத போரட்டத்தில் 14 பேர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.