கிளிநொச்சியில் இன்று பிற்பகல் புகையிரதம் மோதி ஒருவர் பலி(காணொளி)

285 0

இன்று பிற்பகல் 03.30 மணியளவில் கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப்புகையிரதமும், புகையிரதக் கடவையை கடக்க முற்;பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.