கிழக்கு மாகாணத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கில் மழைக் காலங்களில் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்குகின்றன.
இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்
இதனைக் கருத்திற் கொண்டு முறையான வடிகாண் கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதற்கு கிழக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது.
கிழக்கின் முக்கிய அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்துள்ளார்.