ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு மதுரையில் ஏற்பட்ட பரிதாபநிலை

235 0

ஶ்ரீ லங்கன் எயால்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் சிலர் முட்கம்பிகளில் சிக்கிக்கொண்ட சம்பவமொன்று தமிழகம் – மதுரையில் பதிவாகியுள்ளது.

மதுரையில் இருந்து கொழும்பு நோக்கி செல்ல தயாராக இருந்து விமானத்தை நோக்கி அதன் செயற்பாட்டு குழுவினர் சென்றுள்ளனர்.

இதன் போது விமான நிலையத்தை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் , தடுப்புக்காக போடப்பட்டிருந்த முட்கம்பி வேலிக்கு கீழாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

போராட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு அருகில் வீதி மூடப்பட்டமையே இந்த நிலைமைக்கு காரணமாகும்.

இவர்கள் சாரதி ஒருவரின் உதவியுடன் இவ்வாறு மாற்றுவழியினை பயன்படுத்தியுள்ளதாக ஶ்ரீ லங்கன் எயால்லைன்ஸ் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

மேலும் , உரிய நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஊழியர்கள் தாமதிக்காமல் இலங்கையை நோக்கி புறப்பட்டுள்ளனர்.