கிழக்கு பல்கலைக்கழகத்தின் விடுதி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

230 0

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதிப்  பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என்று, உயர்க் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னதாக கேள்வியெழுப்பிய நளிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விப் பயிலும் 1,800 மாணவர்கள், விடுதி வசதிகள் இன்றி அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாணவர்களுக்கு விடுதி வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுமா? என்று வினவினார்.

அதற்குப் பதிலளித்த உயர்க் கல்வியமைச்சர், “பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், நாட்டில் இல்லை. பதில் ஆணையாளரே கடமையில் இருக்கின்றார்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு, வாடகைக்கே விடுதி பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.