ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

257 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நிராகரிப்பதாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை அகற்றி எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை நிராகரித்தமை தொடர்பில் இன்று முன்வைக்கப்பட்ட மனு குறித்த விசாரணையின் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மனுவை குறித்த வழக்கு விசாரணை கோவைக்குள் சேர்க்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.