சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

245 0

சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், அதேயிடத்தை சேர்ந்த சின்னையா மார்கண்டு (வயது 84) என, பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை காணாமல் போயிருந்த முதியவரை, அவரது மனைவி தேடியபோது, கிணற்றில் இவரது சடலம் மிதந்தாகவும் இதனை அடுத்து, சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.