கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் விடுதலை

262 0

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கருணாகரனினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த நான்கு தினங்களாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி கோரி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகப் பேரவைக் கட்டடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் மாணவர்கள் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்றைய தினம் இந்த வழக்கினை விசாரணை செய்த ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இரு தரப்பினரிடையேயும் சமாதான நிலையை ஏற்படுத்த முற்பட்டபோதும் எழுந்த முரண்பாடுகள் காரணமாக வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதி ஏறாவூர் நீதிமன்றில் நடைபெறும் என்ற உத்தரவினை பிறப்பித்துள்ளார்.