அழுத்கமவில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டார் கோட்டாபய – அஸ்வர்

568 0

அழுத்கமவில் தவறு நடந்ததை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் தற்பொழுது வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களே இந்த அரசாங்கத்தில் இடம்பெறுவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.

அழுத்கம சம்பவம் தற்போதுள்ள அரசாங்கத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தின் போது முஸ்லிம் அமைச்சர்கள் சிலரும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவார்கள் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.