ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும்

1052 0

நாடு கேட்டுப் படை கண்டோம்-இன்று
நாதி கெட்டுப் போவதற்கோ?
காடு மேடு களனியெங்கும்-கள
மாடி மாண்ட வீரர்களை
மனதோடு தாங்கிப் போராடு-தமிழ்
ஈழம் நாளை நமதாகும்

ஓர் அணியாய் நின்று போராடு
மனிதச் சங்கிலி ஆகட்டும்
தமிழீழம் ஒன்றே முடிவென்று
திசைகள் நான்கும் கூறட்டும்