ஏனைய நாடுகளின் பிரச்சினையை காண்பித்து அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்சி – ஜே.வி.பி

310 0

ஏனைய நாடுகளின் பிரச்சினைகளைக் காண்பித்து அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன் ரஷ்ய – உக்ரேன் மோதலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடும். இதனை காணரமாகக் காண்பித்து அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு முயற்சிக்கும். ஆனால் எரிபொருள் தட்டுப்பாடுக்கு இதனை காரணமாகக் கூற முடியாது.

மேலும் மின்சக்தி அமைச்சரும் வலு சக்தி அமைச்சரும் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். அமைச்சர்களை அவர்களது பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அமைச்சர்கள் மாத்திரமின்றி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் கூட பொறுப்பின்றியே செயற்படுகின்றன. அந்நிய செலாவணி வீழ்ச்சி , கடன் உள்ளிட்டவற்றின் காரணமாக நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவிடமிருந்து பெரும் 500 மில்லியன் டொலர் கடனும் நிறைவடைந்த பின்னர் அரசாங்கம் மீண்டும் கடன் தேடிச் செல்லும்.

கொவிட் தொற்றின் காரணமாக அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையவில்லை. மத்திய வங்கி அறிக்கையின் படி அதிக வட்டிக்கு கடன் பெற்றமையே இந்த நிலைமைக்கு காரணமாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.