வலம்புரி சங்கை விற்க முயற்சித்தவர்கள் ஏற்பட்ட பரிதாப நிலை

247 0

10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்றதாக தெரிவித்து, மட்டக்களப்பில் 7 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்குடாவில் வைத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை அடி நீளமான வலம்புரி சங்கு மட்டக்களப்பு மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.