சொகுசு காரில் கஞ்சா- மூவர் கைது

245 0

தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்புக்கு, அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாப் பொதிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து காரை மறித்து காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, காரில் மறைத்து வைத்திருந்த 35 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி 35 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.