விபத்தில் இருவர் பலி – 35 பேர் காயம்

250 0

கொழும்பு- கண்டி பிரதான வீதியின், நிட்டம்புவ, பட்டலிய பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளதோடு 35 பேர் படுகாயடைந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

பஸ்ஸொன்றும் கன்டர் ரக லொறியொன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த பஸ்ஸில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள், வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியொன்றும் சேதமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.