மஹிந்த இன்று முக்கிய அறிவிப்பு?

244 0

downloadதேசிய சுதந்திர முன்னணியின் விசேட பொதுக்கூட்டம் இன்று மாலை சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் விசேட விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என தேசிய சுதந்திர முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேச நாணயகார, பிவித்துரு ஹெலஉறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.