புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கு வரலாற்றுப் பொங்கல் முன்னாயத்தம்

297 0

கிளிநொச்சி கரைச்சி புளியம்பெக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் வரும் மார்ச்சில்!

இப்பொங்கல் உற்சவத்தின் முன்னாயத்தக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருலிங்கநாதன் (காணி) தலைமயில் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி (பதில்) பிரியநந்தினி கமலசிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார முறைகளைப் பின்பற்றி இம்முறை பொங்கல் உற்சவத்தினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்ட்டுள்ளது.

அத்துடன் ஆலய சூழலை சுத்தம் செய்தல் வீதிகளை செப்பனிடுதல், குடிநீர் விநியோகம், போக்குவரத்துச் சேவை, பாதுகாப்புச்சேவை, மின்சார வசதி கழிவகற்றல் வர்த்தக நிலையங்களை ஏலமிடுதல், வைத்திய முதலுதவி சேவைகள், தாகசாந்தி நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதில் ஆலயத்தொண்டர்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்பலர் கலந்துகொண்டனர்.