பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குக: கொழும்பில் கையெழுத்து போராட்டம் !

192 0

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கையெழுத்து போராட்டத்தில் மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்த இந்த போராட்டம் கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தின்போது பயங்கரவாத தடை சட்டத்தை அகற்றி, கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.