தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக தேயிலை அறிமுகம்

230 0

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்தே இந்த அறிமுக விழா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை தேயிலை பயிர் செய்கையின் 150 வது ஆண்டு நிறைவு மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் 92 வது ஆண்டு விழாவை முன்னிட்டே இவ்விழா முன்னெடுக்கப்பட்டது.

தேயிலை பயிர்செய்கையின் எதிர்காலம் கருத்திற்கொண்டு தேயிலைதுறை தொடர்பில், புத்தகம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் 92 வருட வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும் நாட்டின் ஜனாதிபதியின் முதல் வருகையாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வருகை அமைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வின் போது அமைச்சர்களான அமைச்சர் நவின் திஸாநாயக்க, பழனி திகாம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.