மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பினால் யாழ்ப்பாண இந்தியத்துணைத் தூதரகத்தில், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜனிடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மகஜர் கையளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.