ஜனாதிபதியின் ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது – மஹிந்த அமரவீர

254 0

mahinda-amaraweera-0101ஜனாதிபதியின் ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜா எல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தினமும் பேரணி நடத்துகின்றது, கூட்டம் நடத்துகின்றது.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது செய்ய வேண்டிய விடயம் இதுவாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி 17 வருடங்களாக அரசாங்கத்தில் இருந்தபோது இவ்வாறான பல பேரணிகளை நடத்தப்பட்டது.

ஆனால், ஆட்சி மாற்றம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமாயின், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.