27ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டம் வெற்றியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவண்ஸவை வெளிக்கடை சிறைச்சாலையில் நேற்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பலவீனமடையும்போதும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதுபோகும் போதும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களுக்கு அசௌகரிய காலம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கத்தை வீழ்த்தும் செயற்படுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.