பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது

283 0

downloadபிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பெற்றோர்களிடம் பணம் பெற்றுக் கொண்ட நபர் கொழும்பு மோசடி விசாரணை அலுவலகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐவரிடம் 30 இலட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொழும்பு 13 இல் வசிக்கும் 52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.