இந்தியாவின் ஐந்து மானிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்படிக்கை!

265 0

Malik-Samarawickrama-1இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டைச் செய்துகொள்ளவுள்ள சிறீலங்கா அரசாங்கம் இந்தியாவின் ஐந்து மானிலங்களுடன் தனித்தனி வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவுள்ளது.

டாவோசில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில், சிறீலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளும், இந்தியாவுடனான எட்கா உடன்பாடும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த உடன்பாடுகள் மூலம் 2.5பில்லியன் மக்களைக்கொண்ட சந்தைக்குள் சிறீலங்கா நுழையமுடியும்.

இதைவிட தென்னிந்தியாவின் ஐந்து மானிலங்களுடன் வரத்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படும். ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய ஐந்து மானிலங்களுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன்மூலம் 500 பில்லியன் டொலர் பிராந்திய பொருளாதாரத்துக்குள் சிறிலங்கா நுழைய முடியும்.

மேலும் பங்களாதேஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மியான்மார் போன்ற வங்காள விரிகுடா நாடுகளுடன், மேலும் உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜப்பான், பாகிஸ்தானுடனும் சுதந்திர வர்த்தக உடடன்பாட்டை செய்து கொள்வதற்கும் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.