பேராதனை பல்கலையில் மோதல் – மாணவர் காயம்

242 0

1159485882500பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிடிவதை சம்பவம் தொடர்பிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய இரண்டாம் வருட மாணவர் ஒருவர் மூன்றாம் வருட மாணவர்கள் குழுவினரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், தாக்குதலுக்கு இலக்கான மாணவர் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் புதல்வர் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் எட்டு மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களைக் கைதுசெய்ய பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழத்தினாலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.