மட்டக்களப்பு, வெல்லாவெளி, வீரமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
குறித்த இளைஞர்கள் சென்ற உந்துருளி வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சார கம்பத்தில் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே விபத்தில் பலியானர்.
இதேவேளை, மீரிகம – பஸ்யால – கிரிவுல்ல வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.