தொடரூந்து திணைக்கள காணிப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட முயற்சித்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம தொடரூந்து நிலையத்துக்கு அருகில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொடரூந்து நிலையத்துக்கு சொந்தமான காணிகளில் குடியமர்ந்திருப்பவர்களிடம் அவர்கள் பண மோசடியில் ஈடுபட முயற்சித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணி உறுதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொடுக்க தாம் வந்திருப்பதாகவும், அதற்காக பணம் வழங்கவேண்டும் என்றும் மோசடியாளர்கள், குடியிறுப்பாளர்களிடம் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகம் கொண்ட குடியிறுப்பாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், மோசடியில் ஈடுபட முயற்சித்தவர்களைக் கைது செய்துள்ளனர்.
பொரளை, தெமட்டகொட மற்றும் கம்பஹா பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.