நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து மக்கள் அறிந்துவைத்துள்ளனர் – ஜனாதிபதி

301 0

z_p05-the-vexed-01-uநல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து மக்கள் அறிந்துவைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ‘நல்லாட்சி அரச பௌத்த கொள்கை’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியை நடைமுறைப்படுத்துகின்றபோது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகள் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களில் அவர்களை உள்ளடக்கிய அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டது என்பது தொடர்பில் மக்களிடம் ஒரு அபிப்பிராயம் தோன்றி இருக்கும்.

எது எவ்வாறெனினும், நல்லாட்சியை இயன்றளவு நடைமுறைப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.