தமிழ் தேசிய கூட்டமைப்பு பிடிவாதம்

255 0

TNA-FT-123014புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருத்துக் கணிப்பு நடத்தப்படாமல், ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு ஒன்றை ஏற்படுத்தி பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்காகவே புதிய அரசாங்கம் மக்களால் உருவாக்கப்பட்டது.

இதற்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படமுடியாது.

தற்போது கருத்துக் கணிப்பை நடத்த எதிர்ப்பு காட்டி வருகின்ற ஆளும் தரப்பு உறுப்பினர்கள், ஏற்கனவே மகிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க முயற்சித்தவர்கள்.

அவர்கள் மீண்டும் ஜனாதிபதியை மக்களின் ஆணைக்கு விரோதமாகமாற்ற முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.