அண்ணன் ஆணையிட்டால் ஆட்சி செய்வேன்!

266 0

Mahinda-Gotaஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவசியத்தை விட தகுதி தனக்கு உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், தான் போட்டியிடுவது குறித்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த முறையிலும், தான் நாட்டிற்கு சேவை செய்வதற்கு ஆயத்தம் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்புக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் புதிய முகம் ஒன்று குறித்து மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் தான் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டால் அண்ணனின் முழுமையான ஆசிர்வாதத்துடனே போட்டியிடுவதாகவும், அவ்வாறு இல்லை என்றால் போட்டியிடுவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.