பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் “மனித உரிமையின் இருளகட்டும் ஒளி” நிகழ்வு.

753 0

பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் “ “மனித உரிமையின் இருளகட்டும் ஒளி” எனும் தலைப்பில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பு தொடர்பான நிழற்படங்கள் புரொஜெக்டர் ஊடாக காண்பிக்கப்பட்டது. இவ் நிகழ்வு பெரிய அளவில் நடைபாதையில் சென்ற பன்னாட்டு மக்களின் கவனத்தை ஈர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பதட்டமான கொரோனா தொற்றுநோயின் காலச்சூழலிலும், நாங்கள் நம்பிக்கையின் சிறிய சமிக்ஞைகளை தாயக உறவுகளுக்கு அனுப்ப விரும்பியதற்கும், ஈழத்தமிழர்களின் தமிழின அழிப்புற்கு பரிகார நீதியை கோருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடும் குளிருக்கும் மத்தியிலும் இவ் நிகழ்வு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது.