கொட்டகலை – டிரேட்டன் கே.ஓ பகுதியில் உள்ள வீடொன்றில், சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (12) அதிகாலை தண்ணீரை சுடவைப்பதற்காக அடுப்பை மூட்டியிருந்த நிலையில், அது வெடித்தாக குறித்த வீட்டில் உள்ள பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அடுப்பு வெடித்த சந்தர்ப்பத்தில், தாம் சமையல் அறையில் இல்லாதமையால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எரிவாயு கொள்கலன் கொட்டகலை பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.