எல்லை நிர்ணய அறிக்கையில் ஐ.தே.க இன்று கைச்சாத்து

242 0

6468jbrஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதியறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் இன்று கைச்சாத்திடவுள்ளனர்.

குறித்த ஆணைக்குழுவின் இறுதியறிக்கையில் ஐந்து பேர் கைச்சாத்திட வேண்டிய நிலையில் இதுவரை 4 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதி கைச்சாத்திடாமை காரணமாகவே ஆணைக்குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கும் நடவடிக்கை தாமதமடைந்தது.

இதன்படி இன்று ஐ.தே.க. பிரதிநிதி ஏ.எஸ்.எம்.மிஸ்பார் குறித்த அறிக்கையில் கைச்சாத்திட்டால் நாளையதினம் அது துறைசார் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கக் கூடியதாக இருக்கும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் தெரிவித்தார்.